'மத்திய அரசை அம்பானிகள் காப்பாற்றினர்'
குலசேகரம்: அணுசக்தி ஒப்பந்த பிரச்சனையில் 2 அம்பானிகளும் மத்திய அரசை காப்பாற்றி விட்டனர் என பாஜக தொழிற் சங்கமான பிஎம்எஸ் மாநிலச் செயலாளர் சங்கர சுப்பிரமணியன் கூறினார்.
பிஎம்எஸ் ஸ்தாபர் தின விழா குமரி மாவட்டம் குலசேகரம் சந்தை சந்திப்பில் நடந்தது. அப்போது சங்கர சுப்பிரமணியன் பேசும் போது.
மத்திய அரசை 2 அம்பானிகளும் காப்பாற்றி விட்டார்கள். முன் காலத்தில் 30 விசைத்தறிகளுடன் துவங்கிய அம்பானிகளுக்கு இன்று 80 ஆயிரம் கோடி மதிப்பில் சொத்து உள்ளது. இவர்கள் உலக பணக்காரர்கள் வரிசையில் முதல் 10 இடத்துக்குள் வருகின்றனர்.
மத்திய அரசு தற்போது தப்பியிருக்கலாம். ஆனால் அணு ஓப்பந்தம் தேவையா என்பதை நாட்டின் 52 கோடி வாக்காளர்கள் முடிவு செய்வார்கள்.
கம்யூனிஸ்டுகள் தொழிலாளர்கள், விவசாயிகள், பாட்டாளி இவர்களுக்கெல்லாம் தாங்கள் தான் கடவுள் என்று கூறி கொண்டு அவர்களை நசுக்குகின்றனர்.
அணு ஒப்பந்தத்தை ஆதரித்து ஓட்டுப் போட பிரதமருக்கே தகுதியில்லை. காங்கிரஸ் இன்று வெளிநாட்டு தலைவர்களின் ரிமோட் மூலம் இயங்குகிறது என்றார்.












Click it and Unblock the Notifications