மகாராஷ்டிரா-கலிபோர்னியாவில் லேசான நிலநடுக்கம்
மும்பை: மகாராஷ்டிராவில் நள்ளிரவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
மகாராஷ்டிர மாநிலத்தின் பல பகுதியில் நள்ளிரவு 12.41 மணியளிவல் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 4.2 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் சட்டாரா மாவட்டம் கொய்னா பகுதியை மையமாக கொண்டிருந்ததாக நிலவியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர். சேத விவரம் குறித்து எதுவும் தெரியவில்லை. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கலிபோர்னியாவில் நிலநடுக்கம்:
அமெரிக்காவின் கலிபோர்னியாவின் தெற்கு பகுதியிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
12.21 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
லாஸ் ஏஞ்சல்சை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் உருவாகியதாக அமெரிக்கா ஆய்வாளர்கள் தெரிவித்தனர். சேத மதிப்பு குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.