திண்டுக்கல்: இந்துக்கள்-கிருஸ்தவர்கள் மோதல், மதக் கலவர அபாயம்
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே அந்தோணியார் திருவிழா தொடர்பாக இந்துக்கள், கிருஸ்துவர்கள் இடையே மோதல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி அருகே உள்ளது பெருமாள் கோவில் பட்டி. இங்கு அந்தோணியார் ஆலய சப்பர திருவிழா நடைபெறும். அப்போது தேர் பவனி ஊரை சுற்றி வரும்.
இந்த நிலையில் அந்த சப்பரம், காளியம்மன் கோவில் அருகே வரக் கூடாது என்று ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நிலமைமையை உணர்ந்த மாவட்ட கலெக்டர் வாசுகி சப்பரம் செல்ல வேண்டிய பாதையை அளந்து நிர்ணயம் செய்தார். பின்பு இரு தரப்பினர் இடையே பேச்சுவார்ததை நடத்தினர். இதில் சுமூக உடன்பாடு ஏற்படவில்லை.
இந்த நிலையில் தேர் பவனி துவங்கியது. இதனால் ஆவேசம் அடைந்த ஒரு தரப்பை சேர்ந்த சுமார் 250 பேர் ஊரைவிட்டு காலி செய்தனர்.
அவர்கள் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் தங்களது குடும்பத்தோடு தங்கியுள்ளனர்.
இந்த நிலையில் திண்டுக்கல் தாசில்தார் தெய்வேந்தின் இரு தரப்பு மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினரார். ஆனால் அதிலும் சுமூக உடன்பாடு ஏற்படவில்லை.
அப்போது, ஒரு தரப்பினர், காளியம்மன் கோவிலுக்கு சுற்றுசுவர் கட்டித்தர வேண்டும், இரண்டு நாடக மேடைகளில் ஒன்றை தங்களுக்கு ஒதுக்க வேண்டும், என தாசில்தாரிடம் வலியுறுத்தினர்.
தங்களது கோரிக்கைகளை அரசு ஏற்காத பட்சத்தில் தங்களது ரேஷன் கார்டுகளை ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர்.
இதனால் பெருமாள்கோவில்பட்டியில் பாதுகாப்பு கருதி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் பதட்டமான நிலையில் அந்த கிராமம் உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications