பாஜகவின் சிஎன்என் டிவி புறக்கணிப்புக்கு கண்டனம்
டெல்லி: 'ஓட்டுக்கு நோட்டு' விவகாரம் தொடர்பான வீடியோ ஆதாரத்தை ஒளிபரப்பாத வரையில், சிஎன்என்-ஐபிஎன் டிவியை பாஜக புறக்கணிக்கும் என அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான வெங்கையா நாயுடு கூறியிருப்பதற்கு பல்வேறு டிவி நிறுவனங்களும், அதன் எடிட்டர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம் 22ம் தேதி நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசை ஆதரித்து வாக்களிக்க முன்பணமாக 3 பாஜக எம்பிக்களுக்கு ரூ.1 கோடி ரூபாய் லஞ்சம் வழங்கப்பட்டு அந்த பணக் கட்டுகள் லோக்சபாவில் கொண்டு வந்து காட்டப்பட்டன.
எம்.பிக்களுக்கு ரூபாய் நோட்டுக்கள் லஞ்சமாக கொடுக்கப்பட்டதை சிஎன்என் -ஐபிஎன் டிவி ரகசியமாக வீடியோவில் பதிவு செய்துள்ளது. ஆனால் இதுகுறித்து ஆய்வு நடத்த வேண்டியுள்ளது. மேலும், சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜியின் பரிசீலனையில் விவகாரம் இருப்பதால், அது முடியும் வரை தாங்கள் அந்தக் காட்சிகளை ஒளிபரப்பப் போவதில்லை என சிஎன்என் அறிவித்துள்ளது.
இது பாஜகவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து சிஎன்என் ஐபிஎன் டிவியைப் புறக்கணிக்கப் போவதாக அந்தக் கட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து மூத்த தலைவர் வெங்கையா நாயுடு கூறுகையில், அந்த சேனல் அரசாங்கத்தின் கடுமையான நிர்பந்தத்திற்கு ஆளாகியுள்ளது. 'ஓட்டுக்கு நோட்டு' குறித்த விடியோ காட்சிகளை முழுமையாக ஒளிப்பரப்பும் வரை சிஎன்என்ஐபிஎன் சேனலின் விவாத நிகழ்ச்சிகளில் பாஜக நிர்வாகிகள் யாரும் பங்கேற்க மாட்டார்கள்.
இந்த வீடியோ காட்சிகளை ஒளிப்பரப்புவதில்லை என்ற முடிவு பத்திரிக்கை சுதந்திரத்தில் செய்துக் கொள்ளப்பட்ட சமரசம். உண்மையை மறைப்பதற்கு சமமான செயல் என்றார் நாயுடு.
ஆனால் இதை ஐபிஎன் சானலின் தலைவரான ராஜ்தீப் சர்தேசாய் மறுத்துள்ளார். அவர் கூறுகையில், இதழியல் கொள்கையின் அடிப்படையில் எடுக்கப்பட்டது எங்களது முடிவு என்றார்.
பாஜகவுக்கு கண்டனம்:
இந் நிலையில், பாஜகவின் முடிவுக்கு செய்தி ஒளிபரப்பாளர்கள் சங்கம் மற்றும் இந்திய எடிட்டர்கள் கில்டு ஆகியவை கண்டனம் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து செய்தி ஒளிபரப்பாளர்கள் சங்கத் தலைவர் ஜி.கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது பத்திரிக்கை சுதந்திரம் மீதான புதிய வகை மிரட்டலாகும்.
மீடியா உலகம் மற்றும் ஒளிபரப்பாளர்களுக்கு விரோதமாக இந்த முடிவை எடுத்துள்ளது பாஜக. இது தவறான முன்னுதாரணமாக அமைந்து விடும்.
எது தேவை, எது தேவையில்ல என்பதை முடிவு செய்யும் உரிமை ஆசிரியர்களுக்கு உள்ளது என்பதை அரசியல் கட்சிகள் முதலில் அங்கீகரிக்க வேண்டும். இதில் எந்த வகையான தலையீட்டையும் அனுமதிக்க முடியாது.
அப்படி ஒரு தலையீடு மீடியா நிறுவனத்தின் மீது திணிக்கப்பட்டால் அது தனது சுதந்திரத்தை இழந்து விடும். அந்த வகையில் பாஜகவின் புறக்கணிப்பு முடிவு பத்திரிக்கை சுதந்திரத்திற்கு விடப்பட்ட சவாலாகும்.
பாஜக தனது நிலையை மறு பரிசீலனை செய்ய வேண்டும். அரசியல் கட்சிகளுக்கும் மீடியா உலகுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழலை தவிர்க்க முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார்.
எடிட்டர்ஸ் கில்டு தலைவர் அலோக் மேத்தா, பொதுச் செயலாளர் சச்சிதானந்த மூர்த்தி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாஜகவின் நெருக்குதல் போக்கு அதிர்ச்சி அளிக்கிறது.
ஒரு செய்தியை ஒளிபரப்புவதா, வேண்டாமா என்பதை முடிவு செய்யும் உரிமை அந்த சானலின் ஆசிரியருக்கு உள்ளது. அதில் எந்த கட்சியும் தலையிட முடியாது.
விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில் அதுகுறித்த வீடியோ ஒளிபரப்பை காட்டினால் அது விசாரணையின் போக்கை பாதிக்கும் என்பதால்தான் ஒளிபரப்பவில்லை என்று ராஜ்தீப் சர்தேசாய் விளக்கியுள்ளார். இதை பாஜக மனதில் கொள்ள வேண்டும்.
மேலும் ஒரு செய்தியை ஒளிபரப்புவது அல்லது பிரசுரிப்பதற்கு முன்பு அதன் நம்பகத்தன்மையை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்பது ஆசிரியர்களின் மரபாகும். அதைத்தான் ராஜ்தீப் சர்தேசாய் செய்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பான வீடியோ டேப்புகளை சிஎன்என் டிவி தானாகவே முன்வந்து சபாநாயகர் அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளது. அதுதான் முறையான செயல். எனவே பாஜகவின் புறக்கணிப்பு முடிவு ஏற்றுக் கொள்ள முடியாதது, வருந்தத்தக்கது என்று கூறினர்.
-
எவ்வளவு அடி வாங்கியும் திருந்தல.. வாயை விடும் பாக். அமைச்சர்! இந்தியாவின் ஒரு தாக்குதலுக்கு தாங்காது -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Annamalai: தமிழக சட்டசபை தேர்தல்.. ஒரு வழியாக பாஜகவின் "அந்த" பட்டியலில் இடம்பெற்ற அண்ணாமலை பெயர்! -
எச்.ராஜாவுக்கு ஆளுநர் பதவி? சென்னையில் உறுதி கொடுத்த பிரதமர் மோடி.. பாஜக மேலிடம் எடுத்த முடிவு! -
நம்மதான் ஜெயிக்கிறோம்.. கோவையில் செந்தில் பாலாஜி மாஸ் திட்டம்.. கூட்டணி கட்சியினருடன் ஆலோசனை -
தேர்தல் பரப்புரையில்.. துரந்தர், கேரளா ஸ்டோரி, காஷ்மீர் ஃபைல்ஸ் பற்றி பேசிய மோடி! கேரளாவில் சலசலப்பு -
"அண்ணாமலை ஆதரவாளரா?You are rejected!" புதிய பிரச்சார வாகனத்துடன்நொந்து போன அமர்பிரசாத் ரெட்டி ! -
"அண்ணாமலை சட்டசபைக்குள் வரக்கூடாது என பிளான் போட்ட முக்கிய தலைகள்”.. போட்டு உடைத்த திருச்சி சூர்யா! -
Sellur Raju: பாஜகவுடன்தானே? பாகிஸ்தானுடனா கூட்டணி வைத்தோம்? ஆவேசமான செல்லூர் ராஜு! -
விஜய் மனதில் பாஜக இருக்கிறது.. அடித்து சொல்லும் குஷ்பூ.. காரணம் தெரியுமா? -
அண்ணாமலைக்கு இந்த பவர்ஃபுல் போஸ்ட்டிங் தர்றாரா மோடி.. கோவை பிடிவாதம் உடைந்ததா? லாபமா? நஷ்டமா -
காலம் இருக்கு.. காட்சிகள் மாறும்! தேர்தலில் போட்டியிடாதது ஏன்? அண்ணாமலை கொடுத்த புது விளக்கம்












Click it and Unblock the Notifications