14ம் தேதிக்குள் பதவி விலகுகிறார் முஷாரப்!

பாகிஸ்தான் அதிபர் பதவியிலிருந்து முஷாரப்பை நீக்குவதற்கான முயற்சிகளில் ஆளும் கூட்டணியான பாகிஸ்தான் மக்கள் கட்சியும், நவாஸ் ஷெரீப்பின்முஸ்லீம் லீக் கட்சியும் இறங்கியுள்ளன.
அடுத்த வாரம் பதவியிலிருந்து இறக்கும் தீர்மானம் தாக்கல் செய்யப்படும் என ஆளும் கூட்டணி தெரிவித்துள்ளது. நேற்று கொண்டு வரப்படுவதாக இருந்த தீர்மானம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அதிபர் பதவியிலிருந்து விலக முஷாரப் முடிவு செய்துள்ளதாக பாகிஸ்தானிலிருந்து வெளியாகும் வக்த் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான் சுதந்திர தினமான ஆகஸ்ட் 14ம் தேதிக்கு முன்பாக அவர் விலகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ராஜினாமா செய்த பின்னர் முஷாரப்புக்கு எந்தவித பிரச்சினையும் தரப்பட மாட்டாது என பாகிஸ்தான் மக்கள் கட்சி தரப்பிலிருந்து உறுதியளிக்கப்பட்டுள்ளதாகவும் வக்த் செய்தி கூறுகிறது.
மேலும் ராஜினாமா செய்வதற்கு முன்பு நாட்டு மக்களிடம் உரையாற்றும் வாய்ப்பையும் முஷாரப் கோரியுள்ளாராம்.
இந் நிலையில் பாகிஸ்தானில் உள்ள நான்கு மாகாணங்களில் இரண்டு சட்டசபைகளில், முஷாரப் பதவி விலக வேண்டும் என கோரி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications