ஒட்டடைக் குச்சியில் தேசியக் கொடியேற்றிய கொடுமை!
திருவனந்தபுரம்: கேரளாவில் ஒட்டடைக் குச்சியில், தேசியக் கொடியேற்றிய கொடுமை நடந்துள்ளது.
நேற்று நாடு முழுவதும் சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சிகள் தடபுடலாக நடந்தன. வழக்கம் போல ஆங்காங்கே சில குழப்பங்களும் நடந்தன.
இந்த நிலையில் கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள அம்பலப்புழாவில் உள்ள ஒரு கூட்டுறவு வங்கியில், ஒட்டடைக் குச்சியில் தேசியக் கொடியை ஏற்றி கொடிக்கு அவமரியாதை செய்துள்ளனர்.
ஒட்டடைக் குச்சியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தேசியக் கொடி பறந்து கொண்டிருந்தது. அப்பகுதியில் போனோர் இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டு கொடியை அகற்றக் கூறினர். இதையடுத்து உடனடியாக தேசியக் கொடி இறக்கப்பட்டது.
தேசியக் கொடிக்கு அவமரியாதை செய்யும் வகையில் நடந்து கொண்டதற்காக வங்கி மேலாளரும், பியூனும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பின்னர் அவர்களை போலீஸார் கைது செய்தனர்.
கூட்டுறவுத்துறை அமைச்சர் சுதாகரன் சம்பவம் குறித்து அறிந்து நேரில் வந்து விசாரணை நடத்தினார். இருவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications