சிம்கார்டு வாங்க இனி சாட்சிகள் வேண்டும்!
டெல்லி: கல்யாணத்துக்கு மட்டுமல்ல, இனி செல்போனுக்கு மெமரி கார்டு வாங்கவும் இரு சாட்சிகள் வேண்டும்.
ஆண், இனிமேல் யாரேனும் இரு நபர் அடையாள அட்டைக் கொடுத்து சாட்சி கையெழுத்து போட்டால்தான்தான் சிம்கார்டு வாங்க முடியும்!
நாட்டில் நடைபெறும் பல்வேறு தீவிரவாதச் சதிவேலைகளுக்கான தகவல் பரிமாற்றங்களில் இன்றைக்கு செல்போன்களின் பங்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இதுகுறித்து தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் உயர்நிலைக் கூட்டத்தில் சமீபத்தில் விரிவாக அலசப்பட்டது.
தீவிரவாதிகளின் கையில் செல்போன்கள் கிடைப்பதைத் தடுக்க உடனடி நடிவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டது. முதல் கட்டமாக, இனி செல்போன் இணைப்புக்கு சிம் கார்டு வாங்குவோர் தங்கள் முகவரிச் சான்று மற்றும் அடையாளச் சான்று கொடுத்தால் மட்டும் போதாது. வங்கிகளில் புதுக் கணக்கு தொடங்கும்போது கேட்கப்படுவது போல் அதே செல்போன் நிறுவனத்தில் ஏற்கெனவே இணைப்பு வைத்துள்ள இரண்டு நபர்களின் உத்தரவாதக் கையெழுத்து பெற்றுத் தர வேண்டும்.
அடுத்து, சிம் கார்டு மையங்களில் வெப் கேமிரா பயன்படுத்தி வாடிக்கையாளரை புகைப்படம் எடுக்க வைக்க வேண்டும். அதை அந்தந்த பகுதியிலுள்ள பாதுகாப்பு ஏஜென்சியிடம் அவ்வப்போது கடைக்காரர் சமர்ப்பிக்க வேண்டும்.
விரைவில் இந்த விதிமுறைகளை மத்திய அரசு பரிசீலித்து அறிவிப்பு வெளியிடும் என்று உள்துறை அமைச்சரக செயலாளர் மதகர் குப்தா தெரிவித்துள்ளார்.
இந்த விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு ஒருவரது சிம்கார்டு, சமூக விரோதிகள் மற்றும் நாச வேலைகாரர்களிடம் சிக்காமல் இருப்பதுதான் மிகவும் அவசியம்.
யாராவது ஒரு ஆசாமி உங்கள் செல்போனைத் திருடி மெமரி கார்டை மட்டும் எடுத்துக் கொண்டால்கூட நீங்கள் பல சிக்கல்களுக்கு ஆளாகும் அபாயம் உள்ளது. கார்டு தவறான முறையில் பயன்படுத்துவது தெரிந்தால் அது யாராக இருந்தாலும் சிம்கார்டு வைத்திருப்பவர்தான் முதலில் கைது செய்யப்படுவார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதனால் இனி செல்போனை விட சிம் கார்டுகளைத்தான் அதிக கவனத்தோடு பார்த்துக் கொள்ள வேண்டி வரும்!












Click it and Unblock the Notifications