அகமதாபாத் குண்டுவெடிப்பு-லக்னோவில் ஒருவர் கைது
லக்னோ: அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சிமி இயக்க நபரை உ.பி. போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஜூலை 26ம் தேதி அகமதாபாத் நகரில் தொடர் குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்தது. இதுதொடர்பான விசாரணையில் குஜராத் பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், உ.பி. மாநில பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் சிமி இயக்கத்தைச் சேர்ந்த முப்தி அப்துல் பாஷர் இஸ்லாஹி என்பவரை லக்னோவில் வைத்துக் கைது செய்துள்ளனர்.
இவரை ஏற்கனவே அகமதாபாத் போலீஸார் தேடி வந்தனர். பாஷருக்கு அகமதாபாத் குண்டுவெடிப்பில் தொடர்பு இருப்பதாக குஜராத் போலீஸார் கூறுகின்றனர். இந்த நிலையில், லக்னோவில் பாஷர் பிடிபட்டுள்ளார்.
பாஷருக்கு, மாலேகான், பெங்களூர் குண்டுவெடிப்புகளிலும் தொடர்பு இருக்கலாம் என போலீஸார் சந்தேகப்படுகின்றனர். ரகசிய இடத்தில் வைத்து பாஷரை தொடர்ந்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications