சென்னை-ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு இலவச பயிற்சி
சென்னை: சென்னை மனித நேயம் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தின் கீழ் ஐ.ஏ.எஸ். தேர்வுக்குப் பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மனித நேயம் என்ற அமைப்பின் பெயரில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சைதை துரைசாமி ஐ.ஏ.எஸ். தேர்வுக்கான பயிற்சி வகுப்பை நடத்தி வருகிறார். முற்றிலும் இலவசப் பயிற்சி இது.
இங்கு தரமான பயிற்சி, தங்குமிடம், உணவு, உடை, செய்தித்தாள், யோகா வகுப்புகள், போதுமான பாட புத்தங்கள், போக்குவரத்து வசதி போன்றவை ஒராண்டு பயிற்சியின் போது இலவசமாக வழங்கப்படுகிறது.
வருகிற அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள முதன்மை தேர்வுக்கான பயிற்சி வகுப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புகின்றவர்கள் வரும் 18, 19 ம் தேதிகளில் சான்றிதழ்களுடன் நேரடியாக வந்து தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விபரங்களுக்கு 044 - 24 35 83 73 என்ற எண்ணிலோ அல்லது 99406 - 70110 என்ற செல் எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications