திமுக 3வது அணிக்கு வர வேண்டும்- மார்க்சிஸ்ட்
திண்டுக்கல்: முதல்வர் கருணாநிதி, 3வது அணிக்கு வர வேண்டும். காங்கிரஸ் அணியிலிருந்து விலக வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வரதராஜன் அழைப்பு விடுத்துள்ளார்.
திண்டுக்கல்லில் நடந்த சுதந்திர தின விழாவில் கலந்து கொண்ட வரதராஜன் பேசுகையில், எனது வாழ்வில் இது முக்கியமான விழா. அமெரிக்க ஏகாதிபத்தியத்ைத எதிர்த்து அன்று தியாகிகள் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்றும் அப்படிஒரு மாபெரும் போராட்டத்ைத மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கியுள்ளது.
மத்திய அரசின்குறைந்தபட்ச செயல் திட்டம் செயலிழந்ததால் விலைவாசி உயர்ந்து விட்டது. மதவெறி, அணு சக்தி ஒப்பந்தம், விலைவாசி உயர்வு ஆகிய மக்களை பாதிக்கும் திட்டங்களுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டத்தைத் தொடங்கியுள்ளது.
இதற்காக பாஜக, காங்கிரஸ் இல்லாத 3வது அணியை உருவாக்கும் முயற்சியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன என்றார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம் பெறும் 3வது அணியில் திமுகவும் இணைய வேண்டும். இதுகுறித்து முதல்வர் கருணாநிதி பரிசீலிக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications