தூத்துக்குடி-ரூ5000 கோடியில் அனல் மின் நிலையம்!
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: தூத்துக்குடியில் ரூ 5000 கோடியில் அனல் மின் நிலையம் அமைக்கப்படும் என என்.எல்.சி. தலைவர் பிரசன்ன குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நெய்வேலி நிலக்கரிச் சுரங்க நிறுவனத் தலைவர் பிரசன்ன குமார் பேசியதாவது:
என்.எல்.சி நிர்வாகம் கடந்த நிதி ஆண்டில் ரூ 3033 கோடிக்கு வர்த்தம் செய்துள்ளது. வரிக்கு முந்திய லாபமாக ரூ 1421.29 கோடியை ஈட்டியுள்ளது.
இருப்பினும் நடப்பு நிதியாண்டில் உற்பத்தி செயல்பாடுகள் திருப்தி அளிக்கும்படி இல்லை.
தூத்துக்குடியில் ரூ 4909.54 கோடி செலவில் 1000 மெகாவாட் உற்பத்தி செய்யும் அனல் மின் நிலையம் அமைக்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.
இது என்.எல்.சி. தமிழ்நாடு பவர் லிமிடெட் என்ற நிறுவனத்தின் மூலம் செயல்படும என்றார் பிரசன்னகுமார்.












Click it and Unblock the Notifications