பிரான்ஸிடமிருந்து விடுதலை பெற்ற தினம்-புதுவையில் கொண்டாட்டம்
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து விடுபட்டதன் 46வது சுதந்திர தின விழா இன்று புதுச்சேரியில் கொண்டாடப்பட்டது.
இந்தியாவின் ஒரு அங்கமான புதுச்சேரியில் நேற்று நாட்டின் 62வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.
அதேசமயம், 1954ம் ஆண்டு அக்டோபர் 18ம் தேதி தான் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக புதுச்சேரி அறிவிக்கப்பட்டது.
இதுதொடர்பான ஒப்பந்தம் இந்திய, பிரெஞ்சு அரசுகளிடையே கையெழுத்தானது. இதைத் தொடர்ந்து, டி ஜூரே எனப்படும் புதுச்சேரியை விடுவிக்கும் தீர்மானம் பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் 1962ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம்தேதி நிறைவற்றப்பட்டது.
அந்த நாள் பிரான்சிடம் இருந்து புதுச்சேரி விடுதலை பெற்ற தினமாகக் கொண்டாடப்படுகிறது.
சுதந்திர தினத்தையொட்டி புதுச்சேரியில் இன்றும் அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications