முரசொலி மாறன் பிறந்த நாள்- கருணாநிதி அஞ்சலி
சென்னை: மறைந்த மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 74வது பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.
திமுக அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள முரசொலி மாறன் சிலைக்கு முதல்வர் கருணாநிதி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
அமைச்சர்கள் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, பரிதி இளம்வழுதி, கீதா ஜீவன், மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ராஜா, ராதிகா செல்வி உள்ளிட்டோரும், திமுக தலைவர்களும் மாறனுக்கு அஞ்சலி செலுத்தினர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோரும் மாறனுக்கு அஞ்சலி செலுத்தினர்.
உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின், திருச்சியில் முரசொலி மாறன் படத்திற்கு அஞ்சலி செலுத்தினார். கன்னியாகுமரியில் சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேஷ் ராஜன், மாறன் படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்.












Click it and Unblock the Notifications