ஆற்காடு வீராசாமி பேச்சு அநாகரீகம்: வரதராஜன்
Subscribe to Oneindia Tamil
சென்னை: கம்யூனிஸ்ட் கட்சிகள் குறித்து அமைச்சர் ஆற்காடு வீராசாமி பேசியிருப்பது அரசியல் அநாகரீகமானது, அழகற்ற பேச்சு என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,திமுக அமைச்சர் கம்யூனிஸ்ட் கட்சிகள் குறித்து பேசியிருப்பது அபத்தமானது. அரசியல் நாகரீகமற்றது என்று மார்க்சிஸ்ட் கட்சி கருதுகிறது.
கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் கலைஞரின் 50 ஆண்டு சட்டமன்ற பேச்சினுடைய புத்தக வெளியீட்டு விழாவில் மார்க்சிஸ்ட் கட்சி பங்கேற்றது. அப்போதெல்லாம் மார்க்சிஸ்ட் கட்சி தேச பக்தி கொண்ட கட்சியாக திமுகவுக்கு தெரிந்திருக்கிறது.
கருத்து வித்தியாசம் வந்தவுடன் எடுப்பேன், கவிழ்ப்பேன் என்ற நிலையில் திமுக அமைச்சர் பேசுவது அழகல்ல என்றார் வரதராஜன்.












Click it and Unblock the Notifications