தேடப்பட்ட ஹங்கேரி குற்றவாளி சென்னையில் கைது
சென்னை: கொலை, கொள்ளை, மோசடி தொடர்பாக இன்டர்போலால் தேடப்பட்டு வந்த ஹங்கேரி நாட்டைச் சேர்ந்தவர் சென்னை விமான நிலையத்தில் பிடிபட்டார். அவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
ஹங்கேரி நாட்டையைச் சேர்ந்தவர் வில்லியம் பீட்டர் (48). இவர் கொலை, கொள்ளை, மோசடி தொடர்பான பல்வேறு வழக்குகளில் இன்டர்போலால் தேடப்பட்டு வந்தார்.
இவரைப் பற்றி பல்வேறு நாட்டு விமான நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந் நிலையில், ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகரில் இருந்து லுப்தான்சா விமானம் மூலம் வில்லியம் பீட்டர் இன்று காலை சென்னை விமானம் நிலையம் வந்தார். இதுகுறித்த தகவலறிந்த குடியுரிமைத் துறை அதிகாரிகள் சிபிஐ அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் விமான நிலையத்துக்கு விரைந்தது வந்து வில்லியம் பீட்டரை சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்துக்கு கொண்டு சென்றனர். இதனால் சென்னை விமான நிலையித்தில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications