எய்ட்ஸ் இருப்பதாக கூறி கல்யாணத்தை நிறுத்தியவர் கைது
சென்னை: காதலித்து வந்த பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்வதற்காக நிச்சயித்த பெண் வீட்டாரிடம், எய்ட்ஸ் இருப்பதாக போலியான சான்றிதழை கொடுத்த நபரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் ரஞ்சிதாவுக்கும் முகலிவாக்கத்தைச் சேர்ந்த சதீஷ் என்பருக்கும் கடந்த ஏப்ரல் 16ம் தேதி நிச்சயதார்த்தம் நடந்தது. செப்டம்பர் 11ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டது. சதீஷ் தரமணியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார்.
திருமணத்துக்கு 58 பவுன் நகை, வெள்ளி சீர் வரிசை வழங்குவதாக பெண் வீட்டார் கூறியிருந்தனர். இந்நிலையில் மணமகள் ரஞ்சிதாவின் தந்தை ராஜேந்திரனிடம் தனக்கு எய்ட்ஸ் இருப்பதாக சதீஷ் கூறியுள்ளார்.
இதனால் ராஜேந்திரன் அதிர்ச்சியுற்றார். இருப்பினும் சதீஷின் பேச்சில் அவருக்கு சந்தேகம் தட்டியது. இதையடுத்து போலீஸில் புகார் செய்தார் அவர். போலீஸார், சதீஷ் சோதனை செய்து கொண்டதாக கூறப்பட்ட மருத்துவமனைக்குச் சென்று விசாரணை நடத்தினர்.
அங்கு நடத்தப்பட்ட விசாரணையில் சதீஷ் மருத்துவப் பரிசோதனையே செய்து கொள்ளவில்ைல என்றும் அவர் பொய் பேசியுள்ளதும் தெரிய வந்தது.
இதையடுத்து சதீஷிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது தான் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும், காதலியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதால் இப்படி பொய் சொல்லி திருமணத்தை நிறுத்த முயன்றதாக கூறினார்.
இதையடுத்து சதீஷை போலீஸார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications