Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குளித்தலை-வேன் கவிழ்ந்து மணமக்கள் படுகாயம்

Subscribe to Oneindia Tamil

குளித்தலை: திருமண கோஷ்டி சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் மணமக்கள் உள்பட சுமார் 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

கரூர் மாவட்டம், சேங்கல் அருகே உள்ளது பூவம்பாடி. இந்த ஊரைச் சேர்ந்தவர் ரவிக்குமார், டாஸ்மாக் கடை ஊழியர். இவருக்கும் வையம்பட்டியை சேர்ந்த சிலம்பாயிக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டது. உப்பிடமங்கலத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் நேற்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

மணமக்கள், பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் ஒரு வேனில் புறப்பட்டனர். உப்பிடமங்கலம் அருகே ராசக்காகவுண்டனூர் வளைவில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்தது.

இதில் மணமகன் ரவிக்குமார், மணமகள் சிலம்பாயி மற்றும் உறவினர்கள் சுமார் 20 பேர் படுகாயம் அடைந்தனர். அனைவரையும் கரூர் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+