For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாக். போலீஸ் வேன் மீது தாக்குதல்: 9 பேர் பலி

By Staff
Google Oneindia Tamil News

Blast on police van in Pakistan
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் வட மேற்கு மாகாண பகுதியில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் போலீஸார் உள்பட 9 பேர் பரிதாபமாக இறந்தனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக சிறை கைதிகளுடன் போலீஸ் வேன் ஒன்று புறப்பட்டது. கைதிகளுடன் போலீஸ் படையும் உடன் சென்றது. அப்போது பன்னு என்ற பகுதியில் உள்ள பாலத்தை வேன் கடந்தபோது திடீரென்று பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது.

இதில் 9 பேர் உடல் சிதறி பலியாயினர். பலர் படுகாயமடைந்தனர். இறந்தவர்களில் பெரும்பாலும் போலீஸார் என்று கூறப்படுகிறது. கைதிகளும் காயமடைந்தனர். சாலையோரத்தில் நின்றிருந்தவர்களுக்கும் காயம் ஏற்பட்டது.

இது தற்கொலை படை தாக்குதலாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. போலீஸார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர். வேனை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X