சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபித்தார் சிபு சோரன்
Subscribe to Oneindia Tamil
ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டசபையில் இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் சிபு சோரன் தலைமையிலான அரசு வெற்றி பெற்றது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் சிபு சோரன் தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 3 நாட்களுக்கு முன்பு பதவியேற்றது. இன்று சட்டசபையில் நம்பிக்கை வாக்கு கோரினார் சோரன்.
நம்பிக்கை வாக்கு மீதான விவாதத்திற்குப் பின்னர் ஓட்டெடுப்பு நடந்தது. இதில் அரசுக்கு ஆதரவாக 42 வாக்குகளும், எதிராக 34 ஓட்டுக்களும் விழுந்தன. இதன் மூலம் சிபு சோரன் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது.












Click it and Unblock the Notifications