இயக்குநர் சீமான் மீது வழக்கு-பாஜக முடிவு
கோவை: இயக்குநர் சீமான் இந்துக்கள் குறித்து மிக அவதூறாகப் பேசியதாக மீது குற்றம் சாட்டியுள்ள பாஜக அவர் மீது வழக்கு தொடரப் போவதாக கூறியுள்ளது.
இது குறித்து பாஜக வழக்கறிஞர்கள் பிரிவு மாநில பொதுச் செயலாளர் ஸ்ரீதர் மூர்த்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவை அருகே நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் இந்து கடவுள்களை கேவலமாகவும், ஜாதிப் பெயரைச் சொல்லி கிறிஸ்துவரான சீமான் பேசியுள்ளார்.
இதனால் டைரக்டர் சீமான் உள்ளிட்ட சிலர் மீது வன்கொடுமை பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று காவல் நிலையத்தில் புகார் செய்தோம்.
ஆனால் அதற்கு பதிலாக சாதாரண இரு பிரிவுகளின் கீழ் போலீசார் டைரக்டர் சீமான் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அத்துடன் மேல் நடவடிக்கை எடுக்காமல் துடியலூர் போலீசார் வழக்கை கிடப்பில் போட்டு வருகின்றனர். காரணம் கேட்டால் மேலிட பிரஷர் என்று கூறுகின்றனர்.
அமைதியான தமிழகத்தை சீமான் போன்றவர்களின் பேச்சு சீர் குலைத்துவிடும்.
எனவே சீமான் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர் மீது வன்கொடுமை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் கோரி நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய உள்ளோம் என்றார்.