பாகிஸ்தானில் நடக்கும் ஆட்சி நீடிக்காது-ஷெரிப்

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர்கள் தங்கள் போக்கை மாற்றிக் கொள்ளவில்லை என்றால் அவர்களினஅ ஆட்சி 5 ஆண்டுகள் நீடித்து ஆட்சி செய்யும் வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார்.

டிஸ்மிஸ் செய்யப்பட்ட நீதிபதிகளை மீண்டும் பணி அமர்த்துவது, வரும் 6ம் தேதி நடக்க உள்ள அதிபர் தேர்தல் தொடர்பான பிரச்சனைகளால் பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை பாகிஸ்தான் முஸ்லீம் கட்சி தலைவர் நவாஸ் ஷெரிப் வாபஸ் பெற்றார்.

பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் ஆசிப் அலி சர்தாரி இதுகுறித்து தனது வருத்தத்தை தெரிவித்து மீண்டும் ஆதரவு கோரினார். அதை நிராகரித்தார் ஷெரிப். இந்நிலையில் இன்று அவர் கூரியதாவது

பாகிஸ்தான் மக்கள் கட்சி தொடர்ந்து 5 ஆண்டுகள் நிலைத்து நின்று ஆட்சி செய்யும் வாய்ப்பில்லை. பொது பிரச்சனைகள் குறித்து அக்கறைகாட்டாமல், கொள்கை பிடிப்பற்று, வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருந்தால் இந்த அரசு சீக்கிரம் முடிவிக்கு வந்துவிடும்.

இந்த அரசை கவிழ்க்கும் காரியங்களில் எனது கட்சி இறங்காது. மக்களின் நம்பிக்கையை இந்த அரசு இழந்து வருகிறது. அதனால் இந்த அரசு நிலைப்பது கடினம். மீண்டும் கூட்டணியில் சேர அழைப்பு வருகிறது. ஆனால் இனி அவர்களோடு கூட்டணி என்பது இயலாத காரியம்.

வரும் 6ம் தேதி நடக்க உள்ள அதிபர் தேர்தலில் எங்கள் கட்சி சார்பில் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சையத் உஸ்ஸமான் சித்திக் நிச்சயம் போட்டியிடுவார். வேட்பாளரை வாபஸ் பெறும் எண்ணம் இல்லை. தேர்தல் முடிவு வரும் வரை காத்திருப்போம். முன் கூட்டியே எந்த முடிவும் சொல்வது இயலாது.

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. அமெரிக்க கொள்கைகளை பிடித்து கொண்டு செயல்படுவதை இந்த அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். தீவிரவாதிகளுடன் அமைதி பேச்சு வார்த்தை நடத்தி முடிவு காண நாடாளுமன்றத்தில் ஆலோசிக்க வேண்டும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+