அக். 2 முதல் அலுவலகங்கள்-ஹோட்டல்களில் புகை பிடிக்க தடை
பெங்களூர்: அக்டோபர் 2 முதல் தனியார் மற்றும் அரசு அலுவலகங்கள், ஹோட்டல்கள், பப்கள் உள்ளிட்ட இடங்களில் புகை பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. ஐடி நிறுவனங்கள் உள்பட அனைத்து நிறுவனங்களுக்கும் இந்த தடை பொருந்தும்.
இது குறித்து பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நலத்துறை அமைச்சர் அன்புமணி கூறுகையில்,
காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதி முதல் அலுவலகங்களில் புகை பிடிக்க தடை விதிக்கப்படுகிறது.
தனியார் மற்றும் அரசு அலுவலக வளாகங்களில் அன்று முதல் புகை பிடிக்க கூடாது. அப்படியே புகை பிடிக்க விரும்புவர்கள் அலுவலகங்களை விட்டு வெளியேறி வெளியில் போய்த்தான் புகை பிடிக்க வேண்டும்.
ஐடி நிறுவனங்கள் உள்பட அனைத்து நிறுவனங்களுக்கும் இந்த தடை உத்தரவு பொருந்தும். இனிமேலும் நிறுவனங்களில் புகை பிடிப்பதெற்கென தனி இடங்களை ஒதுக்க முடியாது.
சிறு ஹோட்டல்கள், ரெஸ்டாரென்டுகள், பப்கள், டிஸ்கோ அரங்குகளுக்கும் இந்தத் தடை பொருந்தும். 30 இருக்கைகளுக்கு மேல் உள்ள ஹோட்டல்களில் புகை பிடிப்பதற்கென தனி இடம் ஒதுக்கப்பட வேண்டும். அங்கு போதிய காற்றோட்ட வசதி ஏற்படுத்தப்பட வேண்டும்.
புகை பிடிக்கும் தடையை மீறுவோருக்கு ரூ. 200 அபராதம் தற்போது விதிக்கப்படுகிறது. இதை தனி நபர்களுக்கு ரூ. 1,000 ஆகவும், அதை அனுமதிக்கும் நிறுவனங்களுக்கு ரூ. 5,000 ஆகவும் உயர்த்த பரிசீலித்து வருகிறோம்.
புகை பிடிப்பதற்கு விதிக்கப்படும் தடை குறித்து போதிய விளம்பரங்கள் செய்யப்படும். இதுதொடர்பான விளம்பரங்களுக்கு பாலிவுட் நடிகர்கள் உள்ளிட்டோரும் பயன்படுத்தப்படுவர்.
மேலும் அனைத்து புகையிலை தயாரிப்புகளிலும் டிசம்பர் 1ம் தேதி முதல் படத்துடன் கூடிய எச்சரிக்கை வாசகமும் இடம் பெறும். இதுதொடர்பாக புகையிலை பொருள் தயாரிப்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 3 மாத கால அவகாசமும் அவர்களுக்கு தரப்பட்டுள்ளது என்றார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications