கல்பாக்கம் அணு உலை-மின் உற்பத்தி மீண்டும் தொடக்கம்
சென்னை: கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகளுக்காக உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த யூனிட்டில் நாளை முதல் மீண்டும் மின் உற்பத்தி தொடங்குகிறது. இதனால் தமிழ்நாட்டில் நிலவும் மின் தட்டுப்பாடு குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் இரண்டு யூனிட்டுகளில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இவை இயற்கை யுரேனியத்தை எரிபொருளாக கொண்டு இயங்குகின்றன. இந்த இரு யூனிட்டுகளும் தலா 220 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்டவை.
தொடக்கத்தில் தலா 170 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன் உற்பத்தி திறன் 235 மெகாவாட்டாக உயர்த்தப்பட்டது. இதனால் சராசரியாக நாள் ஒன்றுக்கு 5.28 மில்லியன் யூனிட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
தற்போது இயற்கை யுரேனியம் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக பெரும்பாலான அணு மின் நிலையங்களில் 220 மெகாவாட்டிற்கும் குறைவாக உற்பத்தி செய்யும்படி இந்திய அணுமின் கழகம் உத்தரவிட்டது.
இதையடுத்து கல்பாக்கத்தில் சமீபகாலமாக சராசரியாக தலா115 மெகாவாட் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.
மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். அப்போது மின் உற்பத்தி நிறுத்தப்படும். கடந்த ஜூலை மாதம் இரண்டு யூனிட்டுகளிலும் பராமரிப்பு பணிகளுக்காக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
இதனால் தமிழ்நாடு மட்டுமின்றி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் மின் பற்றாக்குறை ஏற்பட்டது.
சில வாரங்களுக்கு முன் முதல் யூனிட்டில் பராமரிப்பு பணி முடிந்து மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. இதில் தினமும் 120 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
தற்போது இரண்டாவது யூனிட்டிலும் பராமரிப்பு பணி முடிவடைந்துள்ளது. இந்த யூனிட்டில் நாளை மின் உற்பத்தி தொடங்கப்படுகிறது. இதிலும் நாள் ஒன்றுக்கு 120 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட உள்ளது.
இந்த மொத்த மின் உற்பத்தியில் 70 சதவீதம் தமிழ்நாட்டுக்கு வழங்கப்படும். எனவே மாநிலத்தில் நிலவும் மின் தட்டுப்பாடு குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
-
தமிழ்நாட்டில் வெப்பநிலை அடியோடு குறையப்போகுது.. வானிலை மையம் குட்நியூஸ் -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா












Click it and Unblock the Notifications