For Quick Alerts
For Daily Alerts
Just In
மனநலம் பாதித்த பெண் பலாத்காரம்-முதியவர் கைது!
மணப்பாறை: மணப்பாறை அருகே மன நலம் பாதித்த இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 72 வயதான முதியவர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ளது களத்துப்பட்டியைச் சேர்ந்தவர் மாரியாயி (18). மன நலம் பாதிக்கப்பட்டவர். இவரது பெற்றோர்கள் இறந்துவிட்டதால் இவரது அக்கா ஜெயலட்சுமி வீட்டில் பராமரிக்கப்பட்டு வருகிறார்.
இவர்களது பக்கத்து வீட்டில வசிப்பவர் கிருஷ்ணன் (72). கடந்த 4ம் தேதி ஜெயலட்சுமி வேலைக்கு சென்ற பின்னர், மாரிமாயியை ஆட்டுப்பட்டிக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்துள்ளார்.
இதையறிந்த ஜெயலட்சுமி மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதுகுறித்து போலீஸார் வழக்குபதிவு செய்தனர். இதையடுத்து கிருஷ்ணன் தலைமறைவாகிவிட்டார். வல்லத்தில் பதுங்கி இருந்த கிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர்.
Comments
Story first published: Tuesday, September 9, 2008, 10:06 [IST]