சமையல் நிகழ்ச்சியை தொகுத்தளித்த தாய் பிரதமர் பதவிக்கு ஆபத்து
பாங்காக்: டிவியில் சமையல் நிகழ்ச்சியை தொகுத்தளித்த தாய்லாந்து பிரதமர் சமக் சுந்தரவேஜ் பதவி விலக வேண்டும் என தாய் அரசியல் சட்ட கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தாய்லாந்து சட்டப்படி அரசுப் பதவியில் இருப்பவர்கள் லாப நோக்கில் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்கக் கூடாதுஎன்பது விதியாகும். ஆனால் அதை மீறி தாய்லாந்து பிரதமர் சமக், அந்நாட்டு டிவி ஒன்றில் சமையல் நிகழ்ச்சிக்கான தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். பல ஆண்டுகளாகவே இவர் தொகுப்பாளராக இருக்கிறார்.
ஆனால் பிரதமர் பதவிக்கு வந்த பிறகும் தொகுப்பாளர் பணியை விடவில்லை. தொடர்ந்து தொகுப்பாளராக செயல்பட்டு வந்தார். இதைக் கண்டித்து ஜனநாயகத்திற்கான மக்கள் கூட்டணி என்ற பெயரில் எதர்க்கட்சியினர் பிரதமர் அலுவலகம் முன்புதொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் சமக் மீது கோர்ட்டிலும்வழக்கு தொடரப்பட்டது. இந்தவழக்கை விசாரித்த அரசியல் சட்ட கோர்ட், சமக், சட்டத்தை மீறி நடந்துள்ளார். எனவே அவர் பதவி விலக வேண்டும் என தீர்ப்பளித்தது.
இருப்பினும் புதிய பிரதமர் தேர்வு செய்யப்படும் வரை, அடுத்த 30 நாட்களுக்கு தற்போதைய அரசு காபந்து அரசாக செயல்படலாம் என கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இந்த தீர்ப்பை ஏற்று சமக் பதவி விலகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அவர் பதவி விலகினாலும், மீண்டும் அவரையே பிரதமராக தேர்ந்தெடுப்போம் என ஆளும் கட்சியான மக்கள் சக்தி கட்சி அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications