அஞ்சல் நிலைய பெண் அதிகாரி மாயம்

Subscribe to Oneindia Tamil

சாத்தான்குளம்: அஞ்சல் நிலைய பெண் அதிகாரி காணாமல் போனார். அவர் கடத்தப்பட்டாரா என்று போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சாத்தான்குளத்தை அடுத்த ஆனந்தபுரத்தைச் சேர்ந்தவர் முருகேசன். பால் வியாபாரி. இவரது மனைவி லில்லி எலிசபெத் ராணி. பழங்குளம் அஞ்சல் நிலையத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 29ம் தேதி காலை வழக்கம்போல் வேலைக்கு புறப்பட்டார்.

ஆனால் அன்று இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த முருகேசன், அலுலவகம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடினார். எங்கு தேடியும் எலிசபெத் ராணியை கிடைக்கவில்லை. இதுகுறித்து சாத்தான்குளம் போலீஸில் புகார் செய்தார்.

அதேபோல் சாத்தான்குளம் உபகோட்ட தபால் ஆய்வாளர் மாரியப்பனும் விடுமுறையில் சென்ற தபால் அதிகாரி லில்லி எலிசபெத் ராணி மீண்டும் பணிக்கு வரவி்ல்லை என்று போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் சாத்தான்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். எலிசபெத் கடத்தப்பட்டாரா என்று தேடி வருகின்றனர். உறவினர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களிடன் விசாரணை நடந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+