மனைவி, மகளுடன் துபாய் கடலில் மிதந்த கேரள தொழிலாளர்
துபாய்: கோழிக்கோட்டைச் சேர்ந்த இந்தியத் தொழிலாளர் ஒருவர் தனது குடும்பத்தினருடன் துபாய் கிரீக் பகுதியில் கடலில் மூழ்கி இறந்தார். இது இயற்கையான மரணமா அல்லது தற்கொலையா என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கோழிக்கோட்டைச் சேர்ந்தவர் கிரீஷ் குமார் (35). துபாய் டிரை டாக்ஸ் பகுதியில், மெக்கானிக் ஆக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சஃபீகா (27). இவர்கள் இருவர் மற்றும் அவர்களது 2 வயது மகள் கெளரி நந்தா ஆகியோரின் உடல்கள் துபாய் கிரீக் பகுதியில் மிதந்தன.
இதையடுத்து மூன்று பேரின் உடல்களையும் போலீஸாப் கைப்பற்றினர். உடல்களை தடயவியல் ஆய்வுக்கு போலீஸார் அனுப்பி வைத்துள்ளனர். சிறுமியின் உடலில் காயம் இருந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு மரணத்திற்கான காரணம் குறித்து தெரிய வரும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த படகோட்டி ஒருவர்தான் 3 பேரின் உடல்களும் மிதப்பதைப் பார்த்து போலீஸாருக்கும், கடலோரப் பாதுகாப்புப் படைக்கும் தகவல் தெரிவித்தார்.
இதற்கிடையே, தாய் மற்றும் மகளின் உடல்கள் கயிற்றால் கட்டப்பட்டிருந்ததாக ஒரு தகவல் கூறுகிறது.
கிரீஷ் குமார் காரில் மனைவி, மகளுடன் கடலுக்கு வந்ததாகவும், இந்திய தூதரகம் அருகே காரை நிறுத்தி விட்டுச் சென்றதாகவும் தெரிய வந்துள்ளது.
இந்தியில் எழுதப்பட்ட ஒரு கடிதமும் சம்பவ இடத்திலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. அதில், கிரீஷின் சகோதரி மூலம் சில பிரச்சினைகள் இருந்து வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மரணம் குறித்து துபாய் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications