வனத்துறை ஜீப்பில் 15 நாட்களாக 'குடியிருந்த' மலைப் பாம்பு
கிருஷ்ணகிரி: வனத்துறைக்கு சொந்தமான ஜீப்பில் 15 நாட்களாக பதுங்கியிருந்த மலைப்பாம்பு நீண்ட போராட்டத்துக்கு பிறகு மீட்கப்பட்டு காட்டில் விடப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் சோக்கடி பகுதியில் கடந்த 5ம் தேதி மலைப்பாம்பு ஒன்று நடமாடி வருவதாக ராயக்கோட்டை வனத்துறையினரிடம் பொதுமக்கள் புகார் கூறினர்.
இதையடுத்து அங்கு சென்ற வனத்துரையினர் பாம்பைப் பிடித்து அதை சாக்குப் பையில் போட்டு ஆலப்பட்டி காட்டுக்குக் கொண்டு வந்தனர்.
அங்கு சென்று பார்த்தபோது பை திறந்து கிடந்தது. அதில் பாம்பு இல்லாததை பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து தாங்கள் ஜீப்புக்குள் சோதனை செய்தனர். ஆனால் பாம்பு கிடைக்கவில்லை. பின்னர் அலுவலகத்துக்கு சென்று விட்டனர்.
இந்த நிலையில் நேற்று ஜீப் டிரைவர் வண்டியை ஓட்டிச் சென்றார். ஜீப்பின் கியர் பாக்ஸில் வழவழப்பாக ஏதோ தட்டுப்பட்டதை உணர்த்து என்னவென்று பார்த்தார்.
அப்போதுதான் அது மலைப்பாம்பு என்பது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் ஜீப்பை அங்குள்ள மெக்கானிக் ஷெட்டுக்கு கொண்டு சென்றார்.
அங்கு சுமார் 4 மணி நேரம் போராடி மலைப்பாம்பை உயிருடன் மீட்டனர். சுமார் 15 அடி நீளமுள்ள அந்த பாம்பு, 15 நாட்களுக்கு முன் சோக்காடியில் இருந்து ஆலப்பட்டிக்கு கொண்டு செல்லும்போது காணாமல் போன பாம்பு என்பது தெரியவந்தது.
இந்த முறை மிகுந்த கவனத்துடன் பாம்பை மகாராஜா கடை காப்பு காட்டில் கொண்டு போய் பாம்பை விட்டு விட்டு வந்தனர்.
இதில் பயங்கரம் என்னவென்றால் - இந்த 15 நாட்களில் பலமுறை வாட்டர் சர்வீஸ், ஆயில் சர்வீஸுக்கு ஜீப் போயிருந்தது. மேலும் அதிகாரிகள் இந்த ஜீப்பிலேயே சென்னை வரைக்கும் போய் வந்துள்ளனராம்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications