தேமுதிக தொழிற்சங்க அலுவலகம் மீது இந்து மக்கள் கட்சி தாக்குதல்
கோவை: கோவையில் உள்ள தேமுதிக தொழிற்சங்க அலுவலகத்தை இந்து மக்கள் கட்சியினர் தாக்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள வடிவேலு வீடு தாக்கப்பட்டது தொடர்பாக வடிவேலுவுக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கும் இடையே வார்த்தை போர் நடந்து வருகிறது.
இதுதொடர்பாக விஜயகாந்த் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் கோவையில் உள்ள தேமுதிக தொழிற்சங்க அலுவலகம் தாக்கப்பட்டுள்ளது. இந்து மக்கள் கட்சியினர் திடீரென்று இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். தாக்குதலை நடத்திவிட்டு போலீஸில் அவர்கள் சரணடைந்தனர்.
சரணடைந்தவர்களில் ஒருவரான கோவை இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த அன்புமாரியிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், நடிகர் வடிவேலுவின் வீடு தாக்கப்பட்டது தொடர்பாக அறிக்கை வெளியிட்டேன். அதைத் தொடர்ந்து எனக்கு பல மிரட்டல்கள் வந்தன. அதனால்தான் தேமுதிக தொழிற்சங்க அலுவலகம் மீது தாக்குதல் நடத்தினோம் என்றார்.
இதுகுறித்து அவர்களிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications