Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கண்ணிலிருந்து நூல்-நூதன பிரச்சினையில் மாணவி

Subscribe to Oneindia Tamil

திருவாரூர்: திருவாரூர் அருகே மாணவியின் கண்ணில் இருந்து நூல் போல வருகிறது. இதனால் அவர் பெரும் அவதியுற்றுள்ளார்.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப் பூண்டி அருகே உள்ள சேகல்தீவாம்பாள்பட்டினம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள், விவசாயி. இவரது மகள் புனிதவதி (13). 7ம் வகுப்பு மாணவி.

புனிதவதிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கண்ணில் வலி, மற்றும் நீர் வடிதல் ஏற்பட்டது. இதையடுத்து கோவை சங்கரா கண் மருத்துவமனை சார்பில் திருத்துறைபூண்டியில் நடந்த இலவச கண் பரிசோதனை முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டார்.

அங்கு மருந்து பெற்றுத் திரும்பினர். இருப்பினும் தொடர்ந்து கண்ணில் வலி நீங்கவில்லை. இதையடுத்து மீண்டும் கோவை சென்றனர். மீண்டும் மருந்து வாங்கித் திரும்பினர்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக புனிதவதியின் கண்ணில் இருந்து நூல் போல வந்து கொண்டிருக்கிறது. கண்ணின் இமை ஓரத்தில் வலிக்கிறது என்கிறார் புனிதவதி. கண்ணில் ஆடை போல ஏதோ படர்ந்திருக்கிறது. அதை எடுத்தால் நூல் போல வருகிறது.

மருந்தினால் இப்படி ஆகிவிட்டதா அல்லது கண்ணில் ஏதாவது நோய் வந்திருக்குமா என்று தெரியவில்லை என்று வருந்துகின்றனர் புனிதவதியின் பெற்றோர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+