திருவாரூர்: திமுக பிரமுகருக்கு அடி உதை !
திருவாரூர்: திருவாரூர் அருகே திமுக பிரமுகருக்கு அடி உதை விழுந்தது.
திருவாரூர் அருகே உள்ளது திரு கண்ணமங்கை. இந்த பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபால் திமுக பிரமுகர். இவர் கொடராச்சேரி கடைவீதியில் திமுக உள்கட்சி தேர்தல் குறித்து அவரது நண்பர்கள் சிலருடன் விமர்சனம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த திமுக பிரமுகர்கள் ராஜேஸ், செந்தில், நந்தகுமார், உலகநாதன், சிவசங்கர், ஆகியோர் கண்ணிமைக்கும் நேரத்தில் ஜெயபாலை தாக்கினர். இதில் ஜெயபாலுக்கு கடுமையான காயம் ஏற்பட்டது.
இதனால் சிகிச்சைக்காக அவரை திருவாரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது தொடர்பாக ஜெயபாலின் நண்பர் வெற்றிச்செல்வம் திருவாரூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதே போன்று ராஜேஸ், ஜெயபால் தாக்கியதாக கூறி புகார் கொடுத்தார்.
இரு புகார்களையும் பெற்றுக் கொண்ட போலீசார், ராஜேஸ், செந்தில், நந்தகுமார், உலகநாதன், சிவசங்கர், ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications