பாகி்ஸ்தானில் யுஎஸ் ஏவுகணை தாக்குதல்
இந்தப் பகுதி சுய ஆட்சி கொண்ட, பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதியாகும். இங்கு பாகிஸ்தானின் சட்ட திட்டங்கள் செல்லுபடியாகாது. கிட்டத்தட்ட தனி நாடு போல செயல்படும் இந்தப் பகுதி தலிபான், அல்-கொய்தா தீவிரவாத அமைப்புகளுக்கு பெரும் புகலிடமாக இருந்து வருகிறது.
இந்தப் பகுதியில் 24 மணி நேரமும் அமெரிக்காவின் நூற்றுக்கணக்கான ஆளில்லா உளவு விமானங்கள் கண்காணித்து வருகின்றன. இந்த கண்காணிப்பின் அடிப்படையில் அவ்வப்போது ஏவுகணைத் தாக்குதல்களையும் நடத்தி வருகிறது.
ஆப்கானிஸ்தான், இராக்கில் உள்ள தனது ராணுவத் தளங்கள் அல்லது அரபிக் கடலில் நிறுத்தப்பட்டுள்ள கப்பல்களில் இருந்து இந்த ஏவுகணைகளை அமெரிக்கா ஏவி வருகிறது. சில நேரங்களில் ஆப்கானிஸ்தான் மற்றும் விமானம் தாங்கி கப்பல்களில் இருந்து கிளம்பி வரும் போர் விமானங்களும் நேரடியாக இந்தப் பிராந்தியத்தில் குண்டு வீசி தாக்கிவிட்டுப் போகின்றன.
இதை பாகிஸ்தானால் தடுக்க முடியவில்லை. இதை கண்டித்து குரல் கொடுப்பதோடு நிறுத்துக் கொள்கிறது.
இந் நிலையில் நேற்று நள்ளிரவு இந்தப் பகுதியில் குசாலி தோரிகேல் என்ற இடத்தில் ஒரு வீட்டின் மீது இரு ஏவுகணைத் தாக்குதல்கள் நடந்தன. இதில் அந்த வீட்டிலிருந்த 2 தீவிரவாதிகள் உள்பட 5 பேர் பலியாயினர்.
இந்த ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது யார் என்றும் தெரியவில்லை. ஆனால், இது அமெரிக்கத் தாக்குதல் தான் என பாகி்ஸ்தான் ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் பகுதியின் மீது பறந்த அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதாகவும், இதையடுத்தே ஏவுகணைத் தாக்குதல்கள் நடந்ததாகவும் கூறப்படுகிறது.
பெனாசீர் கொலை-முக்கிய தீவிரவாதி சாவு?:
இதற்கிடையே முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் பெனாசர் புட்டோவின் கொலையை திட்டமிட்டு நடத்திய தலியான் இயக்கத்தின் தளபதியான பைதுல்லா மெஷ்சூத் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டதாக பாகிஸ்தான் பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆனால், இதை தலிபான் அமைப்பு மறுத்துள்ளது.