ரூ. 50க்கு மளிகைப் பொருட்கள் திட்டம் தொடக்கம்
மகாத்மா காந்தி பிறந்த நாள் முதல் 10 மளிகைப் பொருட்களை ரூ. 50க்கு வழங்கும் திட்டத்தை முதல்வர் கருணாநிதி சமீபத்தில் அறிவித்தார். இத்திட்டம் இன்று சென்னையில் முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டது.
மானிய விலையில் மளிகைப் பொருட்கள் என்று பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தை காலை 9 மணிக்கு தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கருணாநிதி பேசுகையில், அண்ணா நூற்றாண்டு பிறந்த நாளான செப்டம்பர் 15ம் தேதி முதல் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசித் திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது மகாத்மாவின் பிறந்த நாளான இன்று இந்தத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது என்றார்.
இத்திட்டப்படி பத்து பொருட்களையும் வாங்கலாம் அல்லது தேவைப்படும் பொருட்களை மட்டும் கூட வாங்கலாம் என அரசு அறிவித்துள்ளது. மாதம் ஒருமுறை இதை வாங்கிக் கொள்ளலாம்.
சென்னையில் 14 இடங்களில் 3ம் தேதி இத்திட்டத்தை அமைச்சர்கள் தொடங்கி வைக்கிறார்கள். அமைச்சர் ஸ்டாலின் ேசப்பாக்கத்திலும், துறைமுகத்தில் அன்பழகனும், அண்ணா நகர் தொகுதியில் ஆற்காடு வீராசாமியும் தொடங்கி வைப்பார்கள்.
வழங்கப்படும் பொருட்கள்
மஞ்சள் தூள் 50 கிராம் - ரூ. 2.
மல்லித்தூள் 250 கிராம் - ரூ. 18.
மிளகாய்த்தூள் 250 கிராம் - ரூ. 14
கடலைப் பருப்பு 75 கிராம் - ரூ. 3
வெந்தயம் 25 கிராம் - ரூ. 1.
கடுகு 25 கிராம் - ரூ. 1.
சோம்பு 25 கிராம் - ரூ.1.50
மிளகு 25 கிராம் - ரூ. 3.
சீரகம் 50 கிராம் - ரூ. 5.50
பட்டை -லவங்கம் 10 கிராம் - ரூ. 2
இதுமட்டுமல்லாமல், முன்பு அறிவிக்கப்பட்டதை மாற்றி சில பொருட்களின் எடை கூட்டப்பட்டுள்ளது. அதன்படி மல்லித்தூள் உள்ளிட்டவற்றின் எடை கூட்டப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.