சந்திராயன்-1 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு அனுப்பப்பட்டது

Subscribe to Oneindia Tamil

Chandrayan
பெங்களூர்: இந்தியாவின் முதல் நிலவுப் பயணத்தை மேற்கொள்ளவுள்ள சந்திராயன்-1 விண்கலம் பல்வேறு சோதனைகள வெற்றிகரமாக முடித்து ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்திற்கு பயணித்துள்ளது. இம்மாத இறுதியில் பிஎஸ்எல்வி-சி11 ராக்கெட் மூலம் சந்திராயன் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

சந்திரனுக்கு ஆளில்லாத விண்கலத்தை செலுத்தும் திட்டத்தை இந்தியா மேற்கொண்டுள்ளது. இதற்காக சந்திராயன்-1 என்ற விண்கலத்தை இஸ்ரோ வெற்றிகரமாக வடிவமைத்துள்ளது. முழுக்க முழுக்க இந்திய தயாரிப்பில் உருவாகியுள்ளது சந்திராயன்-1.

பெங்களூரில் உள்ள இஸ்ரோ செயற்கைகோள் மையத்தில் விஞ்ஞானிகளின் கடின உழைப்பில் சந்திராயன் அனைத்து கட்ட சோதனைகளிலும் வெற்றி பெற்றுவிட்டது. இறுதியாக சுற்றுச்சூழல் தொடர்பான சோதனையும் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

இம்மாத இறுதியில் சந்திராயன் நிலவுக்கு பயணத்தை மேற்கொள்ளும் என்று விஞ்ஞானிகள் அறிவித்தபடி, விண்கலம் ஸ்ரீஹரிகோட்டா செயற்கைகோள் செலுத்தும் மையத்துக்கு பத்திரமாக அனுப்பப்பட்டுள்ளது.

அங்கு இறுதிகட்ட சோதனைகள் செய்யப்பட உள்ளது. பின்னர் பிஎஸ்எல்வி-சி11 ராக்கெட்டுடன் இம்மாத இறுதியில் சந்திராயன்-1 நிலவுக்கு செலுத்தப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+