மீனவர்கள் தாக்கப்படும் விவகாரம்: பிரதமருக்கு கருணாநிதி கடிதம்
Subscribe to Oneindia Tamil

பிரதமர் மன்மோகன் சிங்கை, நேற்று கனிமொழி சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம், முதல்வர் கருணாநிதி எழுதிய கடிதத்தை வழங்கினார்.
பின்னர் வெளியில் வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், பல்வேறு முக்கியப் பிரச்சனைகள் குறித்து பிரதமருடன் பேசினேன். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படும் சம்பவங்கள் குறித்து பிரதமரின் கவனத்திற்குக் கொண்டு சென்றபோது, இந்தப் பிரச்சனையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் உறுதியளித்தார்.
பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை விரைவில் மத்திய அரசு கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications