பங்குச்சந்தையில் பெரும் சரிவு - சென்செக்ஸ் 12,000 புள்ளிகளுக்கு கீழ் போனது
மும்பை: மும்பை பங்குச் சந்தையில் இன்று மிகப் பெரும் சரிவு ஏற்பட்டது. இதையடுத்து சென்செக்ஸ் 12 ஆயிரம் புள்ளிகளுக்குக் கீழ் போனது. ஆசிய பங்குச் சந்தைகளிலும் இன்று இதே நிலைதான் காணப்பட்டது.
இன்று காலையிலேயே ஆசிய பங்குச் சந்தைகளில் ெபரும் வீழ்ச்சி காணப்பட்டது. வர்த்தகம் ஆரம்பத்திலிருந்தே சரிவுடன் இருந்தது.
அமெரிக்க நிதிச் சந்தையில் ஏற்பட்டுள்ள சிக்கலுக்கு தீர்வு காண அமெரிக்க அரசு பல பில்லியன் டாலர் அளவுக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ள போதிலும் பங்கு சந்தைகளில் தொடர்ந்து வீழ்ச்சி காணப்பட்டு வருகிறது.
ஆசிய பங்கு சந்தைகளில் இன்று காலை வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே 3 சதவீதம் வரை வீழ்ச்சி காணப்பட்டது.
மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்தில் 472 புள்ளிகள் குறைந்து சென்செக்ஸ் 12,053 புள்ளிகள் ஆனது.
நண்பகல் 12 மணிக்கு மேல் இது மேலும் சரிந்து 12 ஆயிரம் புள்ளிகளுக்குக் கீழ் சென்செக்ஸ் சரிந்தது. இதேபோல் தேசிய பங்கு சந்தையிலும் நிப்டி குறியீடு 146 புள்ளிகள் குறைந்து 3,671 புள்ளிகள் ஆனது.