For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரவிந்த் அடிகாவுக்கு புக்கர் விருது-சென்னையில் பிறந்தவர்

By Staff
Google Oneindia Tamil News

Arvind Adiga
லண்டன்: எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் உலகின் மாபெரும் பரிசான புக்கர் விருதை இந்தியாவின் அரவிந்த் அடிகா வென்றுள்ளார். இவர் சென்னையில் பிறந்தவர் ஆவார்.

அவர் எழுதிய த வைட் டைகர் என்ற நாவலுக்கு 'மேன் புக்கர் பிரைஸ் பார் பி்க்ஷன்' விருது வழங்கப்பட்டுள்ளது.

33 வயதான அடிகா விருதுடன் 47,000 டாலர் பரிசையும் வென்றுள்ளார்.

ஒரு சிறிய இந்திய கிராமத்திலிருந்து புறப்படும் ஏழை ரிக்ஷா தொழிலாளியின் மகன் டீக்கடையை ஆரம்பித்து பின்னர் மாபெரும் தொழிலதிபராக உயர்வதே இந்த நாவலின் கரு. அதை கோபம், கனவு, நகைச்சுவை கலந்து மிக அழகிய நடையில் தந்துள்ளார் அடிகா.

மேலும் இந்தியாவின் சமீபத்திய பொருளாதார வளர்ச்சியில் மறக்கப்பட்ட ஏழைகளின் நிலையையும் வலியுடன் விவரித்துள்ளார் அடிகா.

இந்த விருதை வென்றுள்ள ஐந்தாவது இந்தியர் அடிகா ஆவார். இவருக்கு முன் நைபால், சல்மான் ருஷ்டி, அருந்ததி ராய், கிரன் தேசாய் ஆகியோரும் இந்த விருதை வென்றுள்ளனர்.

கொலம்பியா மற்றும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பயின்ற இவர் டைம் இதழின் இந்திய நிருபராகவும் பணியாற்றியுள்ளார். சில காலம் ஆஸ்திரேலியாவிலும் வளர்ந்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X