கனிமொழி ராஜினாமா-ஏமாற்று வேலை: பாஜக
சேலம்: கனிமொழி தனது எம்பி பதவியை ராஜினாமா செய்துள்ள அறிவிப்பு வெறும் ஏமாற்று வேலை என்றும் சந்தர்ப்பவாத அரசியல் என்றும் பாஜக மாநில துணைத் தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
இலங்கை தமிழர் பிரச்சனையில் மத்திய அரசை வலியுறுத்தி தமிழகத்தை சேர்ந்த 40 எம்பிக்களும் ராஜினாமா செய்வார்கள் என்று தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்திருந்தார்.
ஆனால் கனிமொழி் மட்டும் தனது எம்பி பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். பதவி காலம் முடியும் தருவாயில் ராஜினாமா செய்வது மக்களை ஏமாற்றும் செயல்.
அந்த கட்சி எம்எல்ஏக்களால் மீண்டும் எம்பி பதவி பெற கனிமொழிக்கு வாய்ப்பு உள்ளது. இது சந்தர்ப்பவாத அரசியலின் உச்ச கட்டம்.
உண்மையிலே இலங்கை தமிழர்கள் மீது அக்கறை இருந்தால் கருணாநதியும் அவரை சார்ந்த எம்எல்ஏக்களும்தான் ராஜினாமா செய்ய வேண்டும்.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ததில் சென்னையை சேர்ந்த ஒரு முக்கிய பிரமுகருக்கு பல ஆயிரம் கோடி கைமாறி இருப்பதாக தகுந்த ஆதாரத்துடன் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்கா தெரிவித்துள்ளார். எனவே அந்த துறை அமைச்சர் ராஜா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications