தூத்துக்குடி அருகே 10 இலங்கை மீனவர்கள் கைது
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே இந்திய கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்திய கடலோர காவல் படை கப்பல் அருணா அஷப் அலியில் கமான்டன்ட் ஸ்ரீமன் நாராயணன் தலைமையில் கடலோர காவல் படையினர் ரோந்து சென்றனர். தூத்துக்குடியில் இருந்து 77 கடல் மைல் தூரத்தில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, இந்திய கடல் பகுதியில் இலங்கை மீனவர்கள் 2 மோட்டார் படகுகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். இதையடுத்து இந்திய கடலோர காவல் படையினர் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். படகுகளில் இருந்த 10 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். 2 மின்மோட்டார் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
பின்னர் அவர்கள் தூத்துக்குடி அழைத்து வரப்பட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications