திருமா, நெடுமாறன், வீரமணியை கைது செய்ய சு.சுவாமி கோரிக்கை

கோவை நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எந்தெந்த பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டாரோ அதே பிரிவின் கீழ் தவறுகளை செய்து கொண்டிருக்கும் திருமாவளவன், நெடுமாறன், வீரமணி ஆகியோரையும் கைது செய்ய வேண்டும்.
ஆனால் வைகோவை மட்டும் கைது செய்திருப்பது முதல்வருக்கு அவர் மேல் உள்ள காழ்ப்புணர்ச்சியை காட்டுகிறது.
தமிழக அரசு தன்னை கைது செய்ய திட்டம் தீட்டியிருப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டிருந்தார். அதனை தமிழக டிஜிபி மறுத்திருந்தார். ஆனால் முதல்வரின் வீட்டில் உயர் போலீஸ் அதிகாரிகளுடன் இதற்கான ஆலோசனை நடந்துள்ளது. இது முற்றிலும் உண்மை.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டு விட்டது. ஆனால், மத்திய அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதே நேரத்தில் ஒரிஸ்ஸாவில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்று மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மதுரையில் ஜனதா கட்சி அலுவலகத்தை 100 பேர் கொண்ட கும்பல் சூறையாடியுள்ளது. ஆனால் இதில் 3 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். இதை எதிர்த்து நான் வழக்கு தொடருவேன்.
நாட்டில் நிலவும் பொருளாதார வீழ்ச்சிக்கு நிதியமைச்சர் ப.சிதம்பரம் 90 சதவீதம் பொறுப்பேற்று தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications