விமான நிறுவனங்களின் இழப்பை சரிகட்ட சுங்கவரி ரத்து!
டெல்லி: விமான நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுகட்டும் விதத்தில் விமான எரிபொருள் மீதான 5 சதவீத சுங்க வரியை மத்திய அரசு முழுமையாக ரத்து செய்துள்ளது.
மேலும் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் விமான எரிபொருள் விலையை 16.8 சதவீத அளவிற்கு குறைத்துக் கொள்ள முன் வந்துள்ளன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்து வருவதையடுத்து, இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் புதுடெல்லியில் ஒரு கிலோ லிட்டர் விமான எரிபொருள் விலையில் ரூ.9,429.87 குறைத்து, ரூ.47,017.93 ஆக ஆக்கியுள்ளன.
தற்போது சுங்க வரி முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதையடுத்து, விமான எரிபொருள் விலை ஒரு கிலோ லிட்டருக்கு மேலும் ரூ.1,800 முதல் 2,000 வரை குறைய வாய்ப்புள்ளது.
இந்தியாவில், விமானச் சேவையில் ஈடுபட்டு வரும் பல நிறுவனங்கள் பல்வேறு காரணங்களால் இழப்பைச் சந்தித்து வருகின்றன. விமானப் பயணம் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கையும் சரிவடைந்து வருகிறது. இவற்றைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு, விமான எரிபொருள்களின் மீதான 5 சதவீத சுங்க வரியை முழுமையாக ரத்து செய்துள்ளது.
விரிவாக்க திட்டம்
உள்நாட்டிற்குள் விமான போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்டு வரும் நிறுவனங்கள், ஒரு கிலோ லிட்டர் (1,000 லிட்டர்) விமான எரிபொருளின் விலை ரூ.36,000 ஆக இருக்கும் என திட்டமிட்டு, விரிவாக்கத்தை மேற்கொள்ள முடிவு செய்திருந்தன.
ஆனால், அவர்கள் எதிர்பார்ப்புக்கு மாறாக ஒரு கிலோ லிட்டர் விமான எரிபொருளின் விலை ரூ.57,000 என்ற அளவில் உயர்ந்தது. தற்போது இதன் விலை சுமார் ரூ.10,000 வரை குறைத்துள்ளது பெட்ரோலியத்துறை.
மேலும் விமான நிறுவனங்கள், எண்ணெய் நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய எரிபொருள்களுக்கான கட்டண பாக்கியை செலுத்தும் காலத்தை 60 நாள்களிலிருந்து 90 நாள்களாக நீட்டித்துள்ளது. மேலும் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை 2009-ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ஆறு தவணைகளில் செலுத்தும் வகையிலும் வழி வகை செய்துள்ளது.
-
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
Sonia Gandhi: சோனியா காந்தி மருத்துவமனையில் திடீர் அனுமதி.. ஹாஸ்பிடலுக்கு விரைந்த ராகுல், பிரியங்கா! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி












Click it and Unblock the Notifications