பொருளாதார சிக்கல் இப்போதைக்கு தீராது-பிரதமர்

சர்வதேச பொருளாதார மந்தம், இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் ஆகியவை குறித்து இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களுடன் பிரதமர் இன்று ஆலோசனை நடத்தினார்.
இந்திய பொருளாதாரத்துக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்களை சமாளிப்பது எப்படி என்பது குறித்து அவர்களிடம் பேசினார்.
இதில், ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி, மகிந்த்ரா அண்ட் மகிந்த்ரா அதிபர் ஆனந்த் மகிந்த்ரா, ஐசிஐசிஐ வங்கியின் தலைவர் காமத், ஏர்டெல் அதிபர் சுனில் பாரதி மிட்டல், எச்டிஎப்சி வங்கித் தலைவர் தீபக் பரேக், டிஎல்எப் தலைவர் சிங், எஸ்ஸார் நிறுவன அதிபர் சசி ருயா, வீடியோகான் அதிபர் ராஜ்குமார் தூத்,
சிஐஐ தலைவர் காமத், எப்ஐசிசிஐ தலைவர் ராஜிவ் சந்திரசேதர், அசோசாம் தலைவர் சஞ்ஞன் ஜிந்தால்,
நிதியமைச்சர் ப.சிதம்பரம், திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மாண்டேக் சி்ங் அலுவாலியா, ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பா ராவ் ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய தொழிலதிபர்கள், வெளிநாட்டு நிதி குறைந்துவிட்ட நிலையில் நிறுவனங்களுக்கு வங்கிக் கடன்கள் எளிதாகக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்றனர்.
வங்கி அதிபர்கள் பேசுகையில், வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் நிதி அதிகரிக்கப்பட வேண்டும். வட்டி விகிதம் மேலும் குறைய வேண்டும் என்றனர்.
அவர்களிடையே கவலையோடு உரையாடிய பிரதமர், அமெரிக்கா உள்பட சர்வதேச அளவிலான இந்த சி்க்கலில் இருந்து நமது பொருளாதாரமும் தப்பிக்க முடியாது.
இந்தப் பிரச்சனை மேலும் பெரிதாகவும் வாய்ப்புண்டு. மேலும் நிலைமை சீராக நீண்ட காலம் பிடிக்கலாம்.
நிதி நெருக்கடியால் இந்திய நிறுவனங்களில் முதலீடுகள் குறைய ஆரம்பித்துவிட்டன. வங்கிகளுக்கும் நிதி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த அசாதாரணமான சூழ்நிலையை சமாளிக்க நாம் உரிய நடவடிக்கை எடுத்தாக வேண்டும். நாம் மேலும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
நமது செலவுகளைக் குறைத்து நிதி நிலையை சீர்செய்ய வேண்டும். பண பரிமாற்றங்கள் நம்பிக்கையூட்டுவதாக இருக்க வேண்டும். வங்கிகளுக்கு அரசு பக்க பலமாக இருக்கும். டெபாசிட்தாரர்களின் முதலீடுகள் பத்திரமாக உள்ளன. இதில் அச்சப்படத் தேவையில்லை.
பணப் புழக்கத்தை மேலும் அதிகரிக்க அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும், வளர்ச்சி விகிதத்தை அதிகரிக்கவும் முயல்வோம் என்றார்.
-
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications