பெங்களூர்: 200 கோல்மேன் சேக்ஸ் ஊழியர்கள் நீக்கம்
பெங்களூர்: அமெரிக்க நிதி அமைப்பான கோல்ட்மேன் சேக்ஸ் பெங்களூரில் பணியாற்றி வந்த 200 ஊழியர்களை நீக்கியுள்ளது.
உலகின் மாபெரும் 5 நிதியமைப்புகளில் ஒன்றான கோல்மேன் சேக்ஸ் மட்டும் தான் இப்போதைய நிதி சிக்கலில் இருந்து தப்பியுள்ள நிறுவனமாகும். அந்த நிறுவனம் இப்போதைய பொருளாதாக சிக்கிலில் கூட லாபம் ஈட்டி வருகிறது. ஆனால் லாபம் பெருமளவு குறைந்துவிட்டது.
இதையடுத்து உலகம் முழுவதும் உள்ள தனது ஊழியர்களில் 10 சதவீதம் பேரை பணி நீக்கம் செய்யவுள்ளது. இப்போது இந்த நிறுவனத்தில் உலகம் முழுவதும் 32,569 பேர் பணியாற்றுகின்றனர்.
இந்தியாவி் 2,300 பேர் பணியில் உள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் பெங்களூர் அலுவலகத்திலும் மற்றவர்கள் மும்பை அலுவலகத்திலும் பணியாற்றுகின்றனர்.
இதில் பெங்களூர் அலுவலகத்தில் பணியாற்றும் 200 பேரை அந்த நிறுவனம் நீக்கி உத்தரவிட்டுள்ளது.
2004ம் ஆண்டில் தான் இந்த பெங்களூர் கிளை உருவாக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications