புயல் சின்னம் - தென் மாவட்டங்களில் மழை பெய்யும்
சென்னை: வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால் தென் மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பனி நிலவி வந்தது. மழை இல்லாமல், பகல் நேரங்களில் நல்ல வெயில் அடித்து வந்தது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக வெயிலும், பனியும் குறைந்ததது. நேற்று சென்னை நகரிலும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையே இதற்குக் காரணம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் தெரிவிக்கையில், இலங்கை - தமிழக கடலோரப் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.
இதனால் அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் நல்ல மழை பெய்யும். குறிப்பாக தென் மாவட்டங்களில் கன மழை பெய்யும். சென்னை மேக மூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications