பிரச்சனைகளை விவாதிக்க அவகாசம் தருவதில்லை: சிபிஎம்
கோவில்பட்டி: சட்டசபையில் மக்கள் பிரச்சனைகள் குறித்து விவாதிக்க போதிய அவகாசம் தருவதில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
கோவில்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பொதுக் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட வரதராஜன் பேசியதாவது
கடந்த பல மாதங்களாக கடுமையான விலைவாசி உயர்வு, மின்வெட்டு போன்ற கடும் நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர்.
மின்வெட்டு காரணமாக சிறு தொழில்கள், பஞ்சாலைகள் முடங்கியுள்ளன. இதனால் தொழிலாளர்கள் வேலையிழந்து வருகின்றனர்.
சட்டசபையில் மக்கள் பிரச்சனைகள் குறித்து விவாதிக்க போதிய அவகாசம் தருவதில்லை.
அமெரிக்காவில் ஏற்பட்டு உலகையே தாக்கி வரும் பொருளாதார நெருக்கடி
தமிழகத்தையும் விட்டு வைக்கவில்லை. இப்பிரச்சனையை தீர்க்க மத்திய அரசின் அணுகுமுறை திருப்தியளிப்பதாக இல்லை.
இன்றைக்கு மத்திய அரசு சிறு வணிகத்திலும் கூட வால்மார்ட், ரிலையன்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களை உள்ளே அனுமதித்து பல லட்சக்கணக்கான சிறு வியாபாரிகளின் வாழ்க்கையை சீரழிக்கிறது.
தொழில் நுட்பங்கள் வளர்ந்த நிலையிலும் கூட மனித மலத்தை மனிதன் சுமக்கும் கொடுமை நடைபெறுகிறது. தமிழகத்தில் தீண்டாமைக் கொடுமை தீப்பிடித்து எரிகிறது.
சென்னையில் அரசு சட்டக் கல்லூரியில் மாணவர்கள் ஒருவரை ஒருவரை கடுமையாக தாக்கிக் கொண்டபோது காவல்துறையினர் கைகட்டி வேடிக்கை பார்த்தது மனித தன்மையற்ற செயலாகும் என்றார்.












Click it and Unblock the Notifications