பள்ளி வேன் கவிழ்ந்து 51 குழந்தைகள் காயம்!
Subscribe to Oneindia Tamil
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே பள்ளி வேன் கவிழ்ந்ததில் அதிலிருந்த 51 குழந்தைகள் காயமடைந்தனர். ஒரு குழந்தையைக் காணவில்லை என்று கூறப்படுகிறது.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் திட்டக்குடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளிக்கு சொந்தமான வேனில் தினசரி சுமார் 52 குழந்தைகள் சென்று வருவது வழக்கம்.
இந் நிலையில் பள்ளி குழந்தைகளை ஏற்றிக் கொண்டு வேன் பள்ளிக்கு செல்லும் போது வயலப்பாடி-கீரனூர் பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் வேனில் பயணம் செய்த 51 பள்ளி குழந்தைகள் காயமடைந்தனர். இதில் ஒரு குழந்தை காணவில்லை என்று கூறப்படுகிறது.
காயமடைந்த குழந்தைகளை சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வேன் இன்னும் கவிழ்ந்து கிடக்கும் நிலையில் காணாமல் போன குழந்தை குறித்து பயம் பரவியுள்ளது.












Click it and Unblock the Notifications