எல்லையில் ஸ்தம்பித்த தமிழக-கேரள போக்குவரத்து
Subscribe to Oneindia Tamil
தென்மலை: தமிழக-கேரள எல்லை கோட்டை வாசல் முதல் புனலூர் வரை ரூ.26 கோடி செலவில் 49 கிமீ புதிய சாலை அமைக்கும் பணியினை கேரள அரசு திடீரென ஒத்தி வைத்தது.
இதனை கண்டித்து எல்லை பகுதியான ஆரியங்காவு கிராமத்தில் சாலைமறியல், கடையடைப்பு, கண்டன பேரணி நடந்த அழைப்பு விடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து நேற்று காலை 10 மணிக்கு அப்பகுதியை சேர்ந்த 1500 பேர் மாணவ, மாணவிகள் உள்பட கோட்டைவாசல்-புனலூர் சாலைப் பணியினை உடனே தொடங்க வலியுறுத்தி மாபெரும் கண்டன பேரணியினையும், கடையடைப்பு, சாலை மறியல் போரட்டத்தினை நடத்தினர்.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் இருந்து கேரள செல்லும் வாகனங்களும், அங்கிருந்து தமிழகம் வரும் வாகனங்களும் சுமார் 10 மணி நேரம் இயக்கப்படாமல் சாலையோரம் நிறுத்தப்பட்டது. ஐயப்ப பக்தர்கள் பெரும் பாதிப்பு அடைந்தனர்.













Click it and Unblock the Notifications