பெண் குழந்தை பிறந்ததால் தந்தை தற்கொலை!!!
திண்டுக்கல்: மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்ததால் அந்த குழந்தையின் தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
திண்டுக்கல் கோவிந்தராஜபுரத்தை சேர்ந்தவர் ரமேஷ் (41). பலசரக்கு கடை நடத்தி வருகிறார். இவருக்கு வளர்மதி என்ற மனைவியும், இரு பெண் குழந்தைகளும் உள்ளனர்.
இந்த நிலையில் ரமேஷ்-க்கு ஆண் குழந்தை மீது ஆசை வந்தது. இதனால் வளர்மதி மீண்டும் கர்ப்பம் ஆனார்.
வளர்மதிக்கு ஆண் குழந்தை பிறக்கும் என காத்திருந்த ரமேஷ்-வளர்மதி தம்பதிக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்தது.
இதனால் வருத்தம் அடைந்த ரமேஷ் தனது பல சரக்கு கடையை கூட கவனிக்காமல் சுற்றித்திரிந்துள்ளார்.
இந்த நிலையில் அவர் ஆர்.எம். காலனி அருகே விஷம் அருந்திய நிலையில் கிடந்தார்.
தகவல் அறிந்த போலீசார் அவரை திண்டுக்கல் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால், அவர் ஏற்னவே இறந்து போனதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து திண்டுக்கல் போலீசார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.












Click it and Unblock the Notifications