'சங்கரராமன்'- ஜெயேந்திரர் வழக்கு ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: சங்கரராமன் கொலை வழக்கின் விசாரணை டிசம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
புதுச்சேரி செஷன்ஸ் நீதிமன்றத்தில் சங்கரராமன் கொலை வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம் சாட்டப்பட்டவர்களான 24 பேரில், ஜெயந்திரர் உள்ளிட்ட 12 பேர் வரவில்லை. 12 பேர் மட்டுமே வந்திருந்தனர்.
அரசு தரப்பு வழக்கறிஞர் தேவதாஸ் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வழக்கை ஒத்திவைக்க கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்ற நீதிபதி கிருஷ்ணராஜா, டிசம்பர் 12-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications