டெல்லி சட்டசபைக்கு நாளை தேர்தல்-பலத்த பாதுகாப்பு
டெல்லி: மும்பையில் தீவிரவாதத் தாக்குதல் பின்னணியில் நாளை நடைபெறவுள்ள டெல்லி சட்டசபைத் தேர்தலுக்கு மிக பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
டெல்லி சட்டசபையில் உள்ள 70 சீட்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ராஜேந்திரா நகர் தொகுதி பாஜக வேட்பாளரான நடப்பு எம்.எல்.ஏ பூரன் சந்த் யோகி தற்கொலை செய்து கொண்டு விட்டதால் அந்தத் தொகுதியில் மட்டும் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து 69 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய அதிரடித் தாக்குதலால் நாளைய டெல்லி வாக்குப்பதிவுக்கு மிக பலத்த பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேர்தலையொட்டி 70 ஆயிரம் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
சட்டசபைத் தேர்தலில் மொத்தம் 1.7 கோடி பேர் வாக்களிக்கவுள்ளனர். 863 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
காங்கிரஸ் கட்சி அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. பாஜக 65 தொகுதிகளிலும், அதன் கூட்டணிக் கட்சியான அகாலிதளம் 4 சீட்களிலும் போட்டியிடுகின்றன.
பகுஜன் சமாஜ் கட்சி 69 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
முதல்வர் ஷீலா தீட்சித் 3வது முறையாக காங்கிரஸை அரியணையில் அமர்த்த மும்முரமாக உள்ளார்.
காங்கிரஸ் சார்பில் ஷீலா தீட்சித்தும், பாஜக சார்பில் வி.கே.மல்ஹோத்ராவும் முதல்வர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications